search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் மகிழ்ச்சி"

    • தருமபுரியில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்தது.
    • 15 கிலோ கொண்ட கூடை தக்காளி ரூ. 320 முதல் ரூ. 360 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதி மற்றும் ராயக்கோட்டை பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் வருடம் முழுவதும் சுழற்சி முறையில் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.

    இந்தப் பகுதியில் விளையும் தக்காளிகளை விவசாயிகள் ராயக் கோட்டை, ஜிட்டாண்ட அள்ளி, ஐந்து மைல்கள், பாலக்கோடு, வெள்ளிச் சந்தை உள்ளிட்ட தக்காளி மார்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். இங்கிருந்து உள்ளூர் தேவை போக சேலம், திண்டுக்கல், கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலங்க ளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

    தற்போது தரமில்லாத தக்காளி விதைகள் விற்பனை செய்வதால் தனியார் தக்காளி நாற்றுப் பண்ணைகள் மூலம் விவசாயிகள் ஒரு நாற்று ரூ. 1.50 வாங்கி நடவு செய்தனர். இருந்த நிலையில் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளான பி.கொல்ல அள்ளி, ரெட்டியூர், பொப்பிடி, பெல்ரம்பட்டி, சோமன அள்ளி, கரகூர், திருமல்வாடி, உள்ளிட்ட கிராமங்களில் தக்காளி செடிகளில் வைரஸ் நோய் தாக்குதலால் புள்ளி அழுகல் நோய், ஊசிப்புள்ளி நோய், தண்டு இலைகள் நோய் மற்றும் பழங்களில் கோடுகள் உள்ளிட்டவை பாதிப்பால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    தினசரி 500 டன் தக்காளி விளைவிக்கப்பட்டது. உள்ளூர் தேவைக்குப்போக தென் மாவட்டங்கள் சென்னை மற்றும் கேரள கர்நாடக மாநிலங்களுக்கு அனுப்புவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ. 5 முதல் 7 வரை விற்பனை செய்யப்பட்டது.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மார்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைவால் விலை உயர்ந்து கிலோ ரூ.25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், பெல்ரம்பட்டி, பஞ்சப்பள்ளி, மாரண்ட அள்ளி, கம்பைநல்லூர். உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்வது வழக்கம். நோய் தாக்கத்தால் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் தக்காளி வரத்து கடுமையாக சரிந்துள்ளது.

    இதனால் தக்காளியின் கொள்முதல் விலை உயர்ந்து கிலோ தக்காளி மொத்த விற்பனைக்கு ரூ. 25-க்கும் சில்லறை விற்பனையாக ரூ. 35-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 15 கிலோ கொண்ட கூடை தக்காளி ரூ. 320 முதல் ரூ. 360 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் தீபாவளியை யொட்டி தக்காளி விலை உயர வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.  

    • பரமத்தி வேலூர் பல்வேறு பகுதிகளில் நேற்று பகல் சுமார் 11.30 மணிஅளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
    • அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பரமத்தி, நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், கபிலர்மலை, ஒத்தக்கடை, நல்லூர் , கந்தம்பாளையம், பொத்தனூர், பாண்ட மங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், சோழ சிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பகல் சுமார் 11.30 மணிஅளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    இரவு முழுவதும்

    அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. பகலில் விட்டு விட்டு பெய்த நிலையில் இரவு முழுவதும் பலத்த மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் , நடந்து சென்ற பொதுமக்கள் நனைந்து கொண்டு சென்றனர்.

    அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள், பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் கனமழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

    விவசாயிகள் மகிழ்ச்சி

    தொடர் மழையின் காரணமாக தார் சாலையின் ஓரத்தில் நெடுகிலும் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் அணைகள் நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • மேலும் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. விருது நகர், சிவகாசி, தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, ராஜபாளையம், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக் கோட்டை, காரியாபட்டி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை வரை மாவட்டத்தில் மொத்தமாக 500 மி.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது.

    இதனால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகள், நீர் நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. கண்மாய்களுக் கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இது விவசாயி களுக்கு மகிழ்ச்சியை ஏற்ப டுத்தி உள்ளது. அவர்கள் விவசாய பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ராஜபாளையம் சுற்று வட்டார பகுதியில் 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் நீர்வரத்து அதிக ரித்துள்ளது. செண்பக தோப்பு சாலையில் அணைத்தலை, முடங்கி ஆற்றில் நீர் நிரம்பி செல் கிறது. மறுங்கூர் கண்மாய், ஆதியூர் கண்மாய், புதுக் குளம், பிரண்டைகுளம் கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் முள்ளிக் கடவு, மாவரசியம்மன் கோவில், நீராவி பகுதிகளில் கனமழை பெய்ததால் 6-வது மைல் குடிநீர் தேக்கத்தில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    ராஜபாளையம் பகுதி யில் அய்யனார்கோவில் ஆறு, பேயனாறு, முள்ளி ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம்ராஜா உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள் அங்கேயே முகாமிட்டு ஆற்று நீரை கோடை கால குடிநீர் ஏரிக்கு திருப்பி விட்டு வீணாகாமல் சேமித்து வருகின்றனர். தேவதானம் சாஸ்தாகோவில் அணை நிரம்பி வருகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ராக்காச்சி அம்மன் பாறை பகுதிகளில் தண்ணீர் கொட்டுவதால் அங்கு பொதுமக்கள், பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் மலை பகுதிகளில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகி றது. பிளவக்கல் பெரியார் அணையில் 32 அடிக்கும், கோவிலாறு அணையில் 8 அடிக்கும், வெம்பக் கோட்டையில் 13 அடி அள விற்கும், கோல்வார்பட்டி யில் 11 அடி அளவிற்கும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குல்லூர் சந்தை அணையில் நீர்மட்டம் 8 அடியை கடந்து நிரம்பி வழிகிறது. சாஸ்தா கோவில் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

    திருச்சுழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று விடிய, விடிய கனமழை பெய்தது. இந்த நிலையில் பரளச்சி அருகே உள்ள செங்குளம் பகுதியில் நேற்று பெய்த தொடர் மழை காரணமாக அப்பகுதி யில் உள்ள பல்வேறு சிறு ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டடு அதன் காரணமாக செங்குளம் பகுதியிலுள்ள விளை நிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது.

    சுமார் 30 ஏக்கர் பரப்பள விலான மிளகாய், வெங் காயம், சோளம், உளுந்து மற்றும் மல்லி உள்ளிட்ட பயிர்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கின.

    தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ேமலும் 2 நாட்களுக்கு மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அணைகள், நீர்தேக்கங் களில் மேலும் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்றைய மழை நிலவரம் மில்லி மீட்டரில்:

    வெம்பக்கோட்டை 49.5

    கோவிலாங்குளம் 39

    அருப்புக்கோட்டை 12

    பிளவக்கல் 10.2

    ராஜபாளையம் 26

    திருச்சுழி 18.2

    ஸ்ரீவில்லிபுத்தூர் 9

    சிவகாசி 4.8

    விருதுநகர் 3

    சாத்தூர் 3

    • தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    தருமபுரி மாவட்டம், கடத்தூரை சுற்றியுள்ள, 30-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தொடர் பயிராக காய்கறிகள் பயிரிட்டு வருகின்றனர். இதில் அதிக அளவு தக்காளியை பயிரிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த, 10 நாட்களுக்கு முன்பு , ஒரு பாக்ஸ், தக்காளி விலை ரூ. 100 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது.இதனால் அறுவடை கூலி கூட கிடைக்காத நிலையில் கடும் விவசாயிகள் பாதிப்பு அடைந்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் வரை 25 கிலோ கொண்ட ஒரு பாக்ஸ், 200 ரூபாய் என்ற வகையில் விற்பனை செய்யப்பட்டது.

    தக்காளி நேற்று வரத்து குறைவால் திடீரென விலை உயர்ந்து, 25 கிலோ கொண்ட ஒரு பாக்ஸ், ரூ 500க்கு விற்கப்பட்டது. இதனால் தக்காளி பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தக்காளி மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தருமபுரியில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
    • சன்னமல்லி கிலோ ரூ. 600க்கு விற்பனையானது.

     ,

    தருமபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டி கை தவிர, புரட்டாசி மாதம் முழு வதும் பூக்களின் விலை கடும் சரிவை நோக்கி சென்றது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பூக்கள் பறிக்கும் கூலி யாட்கள் பாதிப்பு அடைந்த னர்.

    இதனைத் தொடர்ந்து சாமந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்களை தருமபுரி நகர பஸ் நிலை யத்தில் இயங்கி வரும் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்த விவசாயிகள் விலை யில்லாமல் பூக்களை பூ மார்க்கெட்டிலேயே ஆங்காங்கே விட்டுவிட்டு சென்ற அவலம் ஏற்பட்டது.

    மேலும் பறித்து பூக்களை விலை இல்லாததால் சாலை ஓரங்களில் கொட்டி விட்டு சென்றனர். கடந்த திங்கள் முதல் பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. நாளை மறுநாள் வரும் ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையை ஒட்டி தற்பொழுது பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    இன்று பூ மார்க்கெட்டில் தரமுள்ள சாமந்திப்பூ கிலோ ரூ. 200 , சம்பங்கி கிலோ ரூ. 200 , ரோஜாப்பூ கிலோ ரூ. 160 , அரளி கிலோ ரூ. 400 , குண்டுமல்லி கிலோரூ. 600 , சன்னமல்லி கிலோ ரூ. 600 , செண்டு மல்லி கிலோ ரூ. 50, என விற்பனை செய்யப்ப டுகிறது.

    இந்த பூக்களின் விலை உயர்வால் விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர். மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்த னர்.  

    • தருமபுரி மாவட்டத்தில் பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • குண்டுமல்லி கிலோ ரூ. 450க்கு விற்பனை

    தருமபுரி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பாரம்ப ரியமாக பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். அதில் முக்கியமாக குண்டுமல்லி, ஜாதிமல்லி, சன்னமல்லி, சம்பங்கி, சாமந்தி, கோழிக்கொண்டை, அரளி,பன்னீர் ரோஸ், பட்டன் ரோஸ், ஆகிய மலர்களை விவசாயிகள் விளைவிக்கின்றனர்.

    மாவட்டத்தில் விளையும் பூக்களுக்கென்று தனி மவுசு உள்ளதால் இங்கு விளையும் பூக்கள் மலேசியா, சிங்கப்பூர், உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தினசரி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பூ மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து பல மாவட்டங்களுக்கும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

    இந்த நிலையில் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி மாத முக்கிய சனிக்கிழமை பண்டிகை நாட்களில் கூட விலையேற்றம் இல்லாமல் மாலைகளுக்கு பயன்படுத்தும் சம்பங்கி, சாமந்தி, பூக்கள் படுவீழ்ச்சி அடைந்து கிலோ 5 ரூபாய் முதல் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பூப்பறிக்கும் கூலி கிடைக்கவில்லை என விவசாய கூலியட்கள் வேதனை அடைந்தனர்.

    இந்த நிலையில் திடீரென பூக்கள் விலை உயர்ந்துள்ளது. குண்டுமல்லி கிலோ ரூ. 450, சன்னமல்லி ரூ. 350, ஜாதி மல்லி கிலோ ரூ. 260 காக்கட்டா கிலோ ரூ. 280 சம்பங்கி கிலோ ரூ. 50 சாமந்தி கிலோ ரூ. 60, அரளி கிலோ ரூ. 100, பன்னீர் ரோஸ் கிலோ ரூ. 50 என இன்று விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மழையால் இந்த ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு விநாடிக்கு 200 கன அடி நீர் வந்தது.
    • 120 கன அடி நீரினை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. கல்வராயன்மலை பகுதியில் உள்ள பொட்டியம், கல்படை, மாயம்பாடி ஆகிய ஆறுகளின் வழியாக வரும் மழை நீர் இந்த அணையில் தேக்கி வைக்கப்படும். கடந்த சில வாரங்களாக வெப்பசலனம் காரணமாக பெய்து வரும் மழையால் இந்த ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு விநாடிக்கு 200 கன அடி நீர் வந்தது. இதனால் அணையின் முழுக் கொள்ளலவான 46 அடியில் 44 அடி நிரம்பியது. சம்பா போகத்திற்கு நெல் நடவு செய்ய உள்ள விவசாயிகளுக்காகவும், அணையின் பாதுகாப்பு கருதியும், அணை நீரை திறந்து விட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி கோமுகி அணையில் இருந்து புதிய மற்றும் பழைய பாசன வாய்க்கால்கள் மூலம் விநாடிக்கு 120 கன அடி நீரினை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

    பழைய பாசன வாய்க்காலில் விநாடிக்கு 55 கன அடிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் பரிக்கம், மண்மலை, கரடிசித்தூர், சாவடிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். புதிய பாசன வாய்க்காலில் விநாடிக்கு 65 கன அடிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கனந்தல், கச்சிராயபாளையம், அம்மாப்பேட்டை, செம்படாங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விநாடிக்கு 100 கன அடிநீர் மழைநீர் கோமுகி அணைக்கு வந்து கொண்டிருப்பதால் நடப்பு சம்பா போகத்திற்கு தேவையான பாசன நீர் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைநதுள்ளனர். இந்த நீர் திறப்பு விழாவில் சங்கராபுரம் எம்.எல்.ஏ., உதயசூரியன், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் ஷ்ரவண்குமார் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள், தி.மு.க. பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    • கனமழை காரணமாக வறண்டு கிடந்த அணை ப்பட்டி வைகை ஆற்றுப்படுகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அதிக அளவில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது.
    • இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்ப ட்டது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை, தோப்பு ப்பட்டி, கோடாங்கிநாயக்கன் பட்டி, என்.ஊத்துப்பட்டி, குளத்துப்பட்டி, சீத்தாபுரம், கோட்டூர், முசுவனூத்து, அணைப்பட்டி, விளாம்பட்டி பகுதியில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் பூ மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக கோடைகாலத்தை மிஞ்சி வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொது மக்கள் சிரமமடைந்தனர். இந்த நிலையில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்ப ட்டது. ஆங்காங்கே மரங்க ளும் சாய்ந்தது. இருந்த போதும் தொடர்மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தற்போது உழவு பணியில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டதால் தண்ணீர் தேங்கி சாலையில் ஓடியது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்ட னர். எனவே ஆக்கிர மிப்புகளை முறையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கனமழை காரணமாக வறண்டு கிடந்த அணை ப்பட்டி வைகை ஆற்றுப்படுகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அதிக அளவில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது.

    திண்டுக்கல் 34, கொடை க்கானல் ரோஸ்காடன் 36.5, பழனி 5, சத்திரப்பட்டி, 57.6, நிலக்கோட்டை 104.6, வேடசந்தூர் 19.5, புகையிலை நிலையம் 19.5, காமாட்சிபுரம் 4.7 மி.மீ. என மொத்தம் மாவட்டம் முழுவதும் 326.6 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • காவிரி நீர்காரைக்கால் மாவட்ட எல்லைக்கு நேற்று முன்தினம் வந்தது.
    • மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகா ரிகளை பாராட்ட கடைமைபட்டுள்ளே ன்என்றார்.

    புதுச்சேரி:

    டெல்டா மாவட்ட விவசாயிகளூக்காக கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர்காரைக்கால் மாவட்ட எல்லைக்கு நேற்று முன்தினம் வந்தது. இந்நிலையில், காரைக்கால் வந்த தண்ணீரை, விவசாயிகள் பயன்பாட்டுக்காக உடனே திறந்துவைக்கவேண்டும் என விவசாயிகள் பலர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை த்தொடர்ந்து, நேற்று காலை நல்லம்பல் நூலாறு ரெகுலேட்டரில் இருந்து பாசத்திற்காக திருநள்ளாறு தொகுதி எம்.எல்.ஏ. சிவா தலைமையில்தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிகழ்வில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் மகேஷ், சிதம்பரநாதன் மற்றும் துறை அதிகாரிகள் விவசாயிகள் பாசனதார்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

    நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ சிவா கூறியதாவது:-இந்த பாசன நீரானது காரைக்கால் மாவட்டத்தில் 5000 ஹெக்டேர் அளவிற்கு பாசன வசதி பெரும். கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைத்த நிலையில், இந்த ஆண்டும் விவசாயத்திற்கு குறித்த நீர் கிடைக்கும். இதற்காக பாடுபட்ட மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகா ரிகளை பாராட்ட கடைமைபட்டுள்ளே ன்என்றார்.

    • உழவர் சந்தையில் கிலோ முள்ளங்கி 20 ரூபாய் முதல் 22 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
    • முள்ளங்கி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப் பட்டி, அரூர், காரிமங்கலம் என 7 வட்டங்களிலும் விவசாயிகள் அதிக படியாக முள்ளங்கி பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

    விதை ஊன்றிய நாளில் இருந்து 45 நாட்களில் முள்ளங்கியை அறுவடை செய்கின்றனர். குறுகிய காலத்தில் அதிக வருமானம் கொடுக்கும் பயிர் என்பதாலும், உரம் உரியா மருந்து செலவினங்கள் குறைவு என்பதாலும் காய்கறி சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் பலரும் தங்கள் வயலில் சிறு பரப்பளவிலாவது முள்ளங்கியை நடவு செய்து லாபத்தை ஈட்டி வருகின்றனர்.

    காரிமங்கலம், பாலக்கோடு, புலிக்கரை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஆண்டுமுழுக்க விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்து வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களாக உழவர் சந்தைகளில் ஒரு கிலோ முள்ளங்கி விலை ரூ.4 முதல் ரூ.6 வரை விற்பனை செய்யப்பட்டது. விலை வீழ்ச்சியால் முள்ளங்கி விவசாயிகள் வேதனை அடைந்தனர். மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் பனி காலத்தில் முள்ளங்கி நடவு செய்து விவசாயிகள் நல்ல விளைச்சலை எடுத்து வருகின்றனர்.

    கிழங்கு நீளமாகவும், திரட்சியாகவும் வளரும் பராமரிப்பும் குறைவு என்பதால் இந்த தருணத்தில் விவசாயிகள் பலரும் முள்ளங்கி சாகுபடியில் ஆர்வமுடன் ஈடுபடுகின்றனர்.

    இவ்வாறு ஒரே நேரத்தில் அதிக பரப்பில் முள்ளங்கி சாகுபடி நடப்பதாலும் சந்தைக்கு கிழங்கு வரத்து அதிகரிப்ப தாலும் விலை சரிவடைந்து விடுகிறது.

    தற்பொழுது கோடை காலம் என்பதால் நீர் பற்றாக்குறையால் விவசாயிகள் முள்ளங்கி அதிக அளவு பயிரிடுவதில் சுணக்கம் காட்டி வருகின்றனர்.

    கிணற்று பாசனம் ஆழ்துளை கிணற்று பாசனம் உள்ளவர்கள் தொடர்ந்து முள்ளங்கி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சந்தைக்கு முள்ளங்கி வரத்து குறைவாக உள்ளதால் தற்பொழுது முள்ளங்கி விலை உயர்ந்து விவசாயிகளிடத்தில் வியாபாரிகள் கிலோ 12 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இன்று உழவர் சந்தையில் கிலோ முள்ளங்கி 20 ரூபாய் முதல் 22 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

    • மா சீசன் நவம்பர் கடைசியில் துவங்கி டிசம்பர் முதல் பிப்ரவரி மாதத்தில் மா ரகங்களில் பூக்கள் பூக்க தொடங்கி யது.
    • தற்போது மாங்காய்கள் கொத்து கொத்தாக காய்ந்து தொங்குகின்றது.

    தருமபுரி,

    தருமபுரி, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவு விவசாயிகள் மாங்காய் சாகுபடி செய்து வருகின்றனர்.

    குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் நடப்பாண்டு 30 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்ப ட்டுள்ளது.

    காரிமங்கலம், பாலக்கோடு, மொரப்பூர், ஆகிய பகுதிகளில் அதிக அளவில் மா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    தருமபுரி மற்றும் பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி அரூர் ஆகிய வட்டாரத்திலும் மா சாகுபடி செய்துள்ளனர். இங்கு செந்தூரா, அல்போன்சா, பெங்களூரா, நீளம், பங்கன பள்ளி, உள்ளிட்ட ரகங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளனர்.

    இங்கு விளைகின்ற மாம்பழங்கள் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

    பருவநிலைக்கு ஏற்ப மா உற்பத்தி திறன் மாறுபடும். இதனால் மா உற்பத்தி சராசரி விலையை கணிக்க முடியாத நிலையில் உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 10 மாங்கூழ் தயாரிக்கும் சிறிய ஆலைகள் உள்ளன.

    இந்த ஆலைகள் மூலம் ஈரான், துபாய், உள்ளிட்ட நாடுகளுக்கு மாங்கூழ் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மா சீசன் நவம்பர் கடைசியில் துவங்கி டிசம்பர் முதல் பிப்ரவரி மாதத்தில் மா ரகங்களில் பூக்கள் பூக்க தொடங்கி யது. தற்போது மாங்காய்கள் கொத்து கொத்தாக காய்ந்து தொங்குகின்றது.

    இதுகுறித்து விவசாயி கூறும்போது தருமபுரி மாவட்டத்தின் இந்த வருடம் அதிக மழை பொழிந்துள்ளதால் மா விளைச்சல் அமோகமாக உள்ளது.

    இந்த வருடம் மா பூ பிடித்த போது மாவட்டத்தில் நல்ல பனிப்பொழிவு மற்றும் பூச்சி தாக்குதல் அதிகமாக இருந்தது. மாம்பூக்கள் அதிகமாக உதிர்ந்தது. தற்போது கோடை காலம் தொடங்கியதால் வெயில் மற்றும் கோடை மழையில் மாம் பிஞ்சுகள் உதிர்ந்தன. ஒரு சில இடங்களில் மாங்காய் அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

    பெங்களூரா ரகம் மாங்காய் நல்ல விளைச்சல் உள்ளது. மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாங்கூழ் ஆலைகள் உள்ளன. நாங்கள் விளைவிக்கும் மாங்காய்களை அறுவடை செய்து ஆலைக்கு நேரடியாகச் சென்று விற்பனை செய்து வருகிறோம். மாற்ற ரகங்களான செந்தூரா, அல்போன்சா, நீலம், பங்கன பள்ளி, ஆகியவைகளை அறுவடை செய்து தினசரி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறோம்.

    தற்போது கோடை வெயில் ஆரம்பித்து உள்ளதால் தண்ணீர் இல்லாத மா மரங்களில் மாங்காய் உதிர்ந்து வருகிறது. நல்ல தண்ணீர் பாய்ச்சினால் உதிர்வது தடுக்கப்படுகிறது.

    மேலும் ஒரு விவசாயி கூறுகையில் 30 வருடங்களுக்கு மேலாக மா விவசாயம் செய்து வருகிறோம். காரிமங்கலம் ஒன்றியத்தில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மா மரம் பூப்பதில் இருந்து அறுவடை செய்யும் வரை மருந்து கடைகளில் ஆலோசனை கேட்டு அதன்படி தான் சாகுபடி செய்து வருகிறோம். இந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு 10 முதல் 15 டன் வரை மாங்காய் விளைச்சல் உள்ளது. இதனால் இந்தாண்டு ரூ.18 முதல் 20 ரூபாய் வரை நல்ல விலை போகிறது என கூறினார்.

    • ராஜகனி என்று அழைக்கக்கூடிய எலுமிச்சையை ஜூலை முதல் டிசம்பர் வரையில் ஏக்கருக்கு 160 செடிகள் வரை நடவு செய்யலாம்.
    • எலுமிச்சைக்கு நிலையான விலை கிடைக்கிறது.

    உடுமலை

    உடுமலை சுற்றுப்புற பகுதியில் ஒரு சில பகுதியில் எலுமிச்சை சாகுபடியும் நடைபெற்று வருகிறது.ஆனால் பருவம் தவறிய மழை மற்றும் பருவநிலை மாற்றத்தால் எலுமிச்சை விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    ராஜகனி என்று அழைக்கக்கூடிய எலுமிச்சையை ஜூலை முதல் டிசம்பர் வரையில் ஏக்கருக்கு 160 செடிகள் வரை நடவு செய்யலாம். செடிவகை சமதளபரப்பிலும் கொடிவகை மலைப்பிரதேசங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது.நடவு செய்த நாளில் இருந்து 3- ம் வருடம் அறுவடைக்கு தயாராகி விடும். அன்றாட உணவில் எலுமிச்சம் பழத்தின் பயன்பாடு உள்ளதால் அவற்றுக்கான தேவையும் ஆண்டு முழுவதும் இருந்து வருகிறது. வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்களை தன்னகத்தே கொண்ட எலுமிச்சை பித்தம், தலைவலி, மலச்சிக்கல், தொண்டைவலியை போக்குவதுடன் கிருமிகளை அழித்து அஜீரணப்பிரச்சனையை தீர்க்கும் வல்லமை பெற்றது.அதுமட்டுமின்றி வயிற்று உபாதைகள், நெஞ்சு எரிச்சல், வாயுவை அகற்றி பசியை உண்டாக்கும் சிறந்த கிருமி நாசினியாகவும் திகழ்கிறது.

    மேலும் கோடை காலத்தில் எலுமிச்சைசாறுடன் உப்பு, நாட்டு சர்க்கரை சேர்த்து தயாரிக்கும் பானகமானது உடலில் ஏற்படும் நீர் இழப்பை குறைக்கிறது.இதனால் பொதுமக்களும் எலுமிச்சையை விரும்பி உணவில் பயன்படுத்தி வருவதால் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றோம். எலுமிச்சைக்கு நிலையான விலை கிடைக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

    ×